கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு உதவ நியூயார்க் நகர நிர்வாகம் முடிவு - 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை அனுப்ப ஏற்பாடு
May 15 2021 9:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை அனுப்ப நியூயார்க் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்து போராடுவதற்காக இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள், 3 லட்சம் பல்ஸ் ஆக்சி மீட்டர்கள், 300 வெண்டிலேட்டர்கள் உள்பட பல்வேறு நியூயார்க் நகர நிர்வாகம் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளசியோவின் செய்தித்தொடர்பாளரும் உறிதுப்படுத்தியுள்ளார்.