அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
Apr 20 2021 7:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 16-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் இந்தத் தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் இன்று முதல் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடைவர்கள் ஆவர் என தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது என தெரிவித்துள்ள அவர், 16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்"என பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 799- ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 67 ஆயிரமாக உள்ளது.