எகிப்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு : விபத்தில் படுகாயம் அடைந்த 98 பேர் மருத்துவமனையில் அனுமதி
Apr 19 2021 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எகிப்தில் பயணிகள் ரயில் தரம் புரண்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 98 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து நைய்ல் டெல்டா சிட்டிக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்து. கெய்ரோ நகருக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் சென்ற போது திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 98 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டன. கடந்த மாதம் எகிப்தில் நடந்த ரயில் விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு மீண்டும் விபத்து நிகழ்ந்திருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.