ஈராக்கில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதல் - 4 பேர் பலி
Apr 16 2021 6:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக் நாட்டில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் பாக்தாத்திற்கு அருகில் உள்ள சர்த் நகரின் சந்தை பகுதியில், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.