மேற்கு ஆப்ரிக்காவின் நைஜர் நாட்டில் மழலையர் பள்ளியில் எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து : 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிப்பு
Apr 14 2021 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்கு ஆப்ரிக்காவின் நைஜர் நாட்டு பள்ளி ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜர் நாட்டின் நியாமி என்ற நகரில் உள்ள மழலையர் பள்ளியில் எதிர்பாராத விதமாக தீ விபத்து நேரிட்டது. மிகச் சிறிய வகுப்பறைகளுக்குள் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளை உடனடியாக வெளியேற்ற முடியாத நிலையில், ஏராளமான குழந்தைகளுக்கு தீ காயம் ஏற்பட்டது. இதில் 20 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் மகாமது, குழந்தைகளை பறிகொடுத்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், கவனக்குறைவால் இந்த விபத்து நேரிட்டிருந்தால் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.