மெக்சிகோவில் நடைபெற்ற மகளிர் தினத்தன்று நடைபெற்ற போராட்டம் கலவரத்தில் முடிந்தது
Mar 9 2021 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில் நடைபெற்ற மகளிர்தினக் கொண்டாட்டம் போராட்டமாக மாறி கலவரத்தில் முடிவடைந்தது.
மெக்சிகோவில் பெண்களுக்கு எதிராக ஏராளமான குற்றங்கள் நடந்துவருகின்றன. 2015ம் ஆண்டுக்குப் பின் இக்குற்றங்கள் 130 சதவிகிதம் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் மகளிர் அமைப்புக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் மகளிர் தினக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதிபர் மாளிகையை முற்றுகையிட மகளிர் அமைப்புக்கள் முயன்றன. இதையடுத்து, அதிபர் மாளிகையைச் சுற்றிலும் இரும்பு அரண்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் மகளிர் தினத்தன்று ஏராளமான பெண்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தைக் கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பல்வேறு இடங்களில் தீவைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் நிலவியது.