இங்கிலாந்து மகாராணியின் குடும்பத்தினர் நிறவெறியுடன் செயல்பட்டதாக இளவரசி மேகன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பிரிட்டன் அரண்மனை சார்பில் மறுப்பு
Mar 9 2021 2:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து மகாராணியின் குடும்பத்தினர் நிறவெறியுடன் செயல்பட்டதாக இளவரசி மேகன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அரண்மனை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் பிரிட்டன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதாகவும், அரச பதவிகளைத் துறப்பதாகவும் கடந்த ஓராண்டுக்கு முன் அறிவித்தனர். மேகனின் தாய் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதால் அவர் கருப்பாக உள்ளார் என்றும், அதனால் ஹாரி- மேகன் தம்பதிக்குப் பிறக்கும் குழந்தை கருப்பாக இருக்கும் என்றும் அரண்மனைவாசிகள் விமர்சித்ததாக தற்போது இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் மகாராணி தம்மிடம் அன்பாக நடந்துகொண்டதாகவும், ஆனால் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு கொடுமைகளை தனக்கு அளித்ததால் தற்கொலை செய்யும் அளவுக்கு விரக்தியடைந்ததாக இளவரசி மேகன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் அரண்மனையின் சார்பில் பேசிய PENNY JUNOR பிரிட்டன் அரண்மனையில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் நிறவெறியுடன் செயல்பட்டனர் என்பது தவறான தகவல் என்றார்.