நியூசிலாந்தில் இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் கொரோனா பாதிப்பு - உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
Jan 25 2021 6:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் முதல் முதலாக நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலை இலகுவாகக் கையாண்ட நாடாக நியூசிலாந்து கருதப்படுகிறது. ஏற்கெனவே ஒரு முறை 100 நாட்களுக்கு எந்த புதிய பாதிப்பும் ஏற்படாத நிலையில், கடந்த நவம்பர் மாதத்துக்குப் பின் யாருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சை தொடங்கியுள்ளது. நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்தை அடுத்த 72 மணிநேரத்துக்கு நிறுத்திவைப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.