தென்கொரியாவில் காப்பாளரின் கால்களைப் பிடித்துக்கொண்ட பாண்டா - உலகம் முழுவதும் வைரலாகப் பரவும் காட்சிகள்
Jan 25 2021 4:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில் காப்பாளரின் கால்களைப் பிடித்துக்கொண்டு அடம்பிடித்த பாண்டா குட்டி குறித்த காட்சிகள் உலக அளவில் வைரலாகிவருகின்றன.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலிருந்து 2016ம் ஆண்டு தென்கொரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பாண்டா, கடந்த மாதம் முதல் குட்டியை ஈன்றது. தற்போது ஓடியாடி விளையாடும் அளவுக்கு வளர்ந்துள்ள அந்த பாண்டா, ஒரு முறை அதன் காப்பாளரின் கால்களைப் பிடித்துக்கொண்டு, அவர் எங்கும் செல்லவிடாமல் தடுத்தது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகின. இக்காட்சிகளை உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் பாத்துள்ளனர், எட்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.