இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா : ஜூலை 17 வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் உத்தரவு
Jan 25 2021 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஜூலை 17-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ள இங்கிலாந்தில், இதுவரை 97 ஆயிரத்து 329 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தப்பட்டதால், மக்கள் மெதுவாக சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், மிகவும் தீவிரமாக பரவியதால், இங்கிலாந்து மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டது. பல்வேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தன.
இதனிடையே, ஜூலை 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ரெஸ்டாரன்ட்கள், மால்கள் போன்றவைகளும் மூடப்பட உள்ளன. தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.