பதவி காலத்தில் 30 ஆயிரம் பொய்களை பேசினார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் - ஊடகங்கள் வெளியிட்ட அதிரடி தகவல்
Jan 25 2021 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தனது நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன் பதவிக் காலத்தில் கூறிய தகவல்களின் உண்மை தன்மை குறித்து, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ட்ரம்ப் தனது நான்கு ஆண்டு கால ஆட்சியில், 30 ஆயிரத்து, 573 பொய் தகவல்களை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்லது. முதல் ஆண்டில், சராசரியாக, நாளொன்றுக்கு, ஆறு பொய் தகவல்களை கூறிய ட்ரம்ப், 2-வது ஆண்டில் நாளொன்றுக்கு 16 பொய்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வது ஆண்டில், நாளொன்றுக்கு 22-ஆக இருந்த ட்ரம்ப்பின் பொய்களின் எண்ணிக்கை, நான்காம் ஆண்டில், 39 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிபர் தேர்தல் முடிவடைந்த நவம்பர் 3-ம் தேதிக்கு பின்னர் மட்டும், ட்ரம்ப் 800 பொய் தகவல்களை கூறியுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.