உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை

Jan 23 2021 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், அண்மையில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியா, சீனா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில், உருமாற்றமடைந்த கொரோனா பரவியுள்ளது. பிரிட்டனில் தீவிரமாகப் பரவி வரும் உருமாற்றமடைந்த வைரஸ் தொற்றால், பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, உருமாற்றமடைந்த கொரோனா பரவல், மிகவும் ஆபத்த‌ான உயிர்க்கொல்லி என தெரிய வந்துள்ளதாகவும், இது வேகமாகப் பரவக்கூடியது என்றும் தெரிவித்தார்.

பிரிட்டனில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வரும் இரண்டு தடுப்பூசிகளு‍மே உருமாற்றமடைந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டவை என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00