போர்ச்சுக்கல்லில் தினமும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறல்
Jan 22 2021 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கல்லில் தினமும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறிவருகின்றனர்.
ஐரோப்பா கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஏழை நாடான போர்ச்சுக்கல்லில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இங்கிலாந்திலிருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிக எண்ணிக்கையில் போர்ச்சுக்கல் நாட்டில் கண்டறியப்பட்டுவருகிறது. இதனால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆம்புலன்ஸ் வாகனங்களில் புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லிஸ்பன் நகரில் வயதான கொரோனா நோயாளி ஒருவர், காத்திருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.