செய்திகளை வெளியிட கட்டணம் விதிக்க அரசு முடிவு - ஆஸ்திரேலியாவில் தேடுபொறி முடக்கப்படும் என அறிவிப்பு
Jan 22 2021 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இணையதளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு கட்டணம் செலுத்தக் கோரினால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி முடக்கப்படும் என அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் உள்ளூர் செய்திகள் உலகின் பல நாடுகளில் இடம்பெறுகின்றன. இந்த செய்திகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஊடகங்களில் இருந்து கூகுள் பெற்றுக்கொள்கிறது. இந்நிலையில், இது போன்ற செய்திகளை வெளியிடுவதில், செய்திகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்துவதை கட்டாயமாக்க ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை அமல்படுத்தினால், கூகுள் தேடுபொறி முற்றிலும் முடக்கப்படும் என, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான கூகுள் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.