உக்ரைன் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்
Jan 22 2021 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டு மருத்துவமனையில் பற்றிய தீயில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் உள்ள இரண்டு மாடி மருத்துவமனையின் மேல் தளத்தில் 33 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில், அந்த மருத்துவமனையில் எதிர்பாராதவிதமாக தீ பற்றியது. உடனடியாக தீ அணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதற்குள் வேகமாகப் பரவிய தீ, மருத்துவமனை ஜன்னல் வழியாக வெளியிலும் கொளுந்துவிட்டு எரிந்தது. ஏராளமான கரும்புகையும் வெளியேறியது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.