அடுத்த 100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் - அமெரிக்க மக்களுக்கு அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்
Jan 22 2021 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.