பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் -முக்கிய ஷரத்துகளில் கையெழுத்திட்ட அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
Jan 21 2021 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே, 17 கோப்புகளில் கையெழுத்திட்டார். முன்னாள் அதிபர் ட்ரம்ப்பால் அறிவிக்கப்பட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பதவியேற்ற முதல் நாளிலேயே நிறுத்தி வைத்துள்ளார். குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான ஆணை, மெக்சிகோவில் இருந்து அகதிகள் நுழைவதைத் தடுக்க சுவர் எழுப்ப ஒதுக்கப்பட்ட நிதியுதவியை ரத்து செய்யும் ஆணை உள்ளிட்ட பல்வேறு கோப்புகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பிலும், விரைவில் அமெரிக்கா மீண்டும் இணையும் எனவும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.