சீனாவின் ஐஸ்கிரீமில் கொரோனா - தொழிற்சாலைக்கு சீல் : ஐஸ்கிரீமை உண்ட 390 பேர் தனிமை
Jan 17 2021 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் Tianjin மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு சீனாவின் Tianjin மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில், கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஆலைக்கு சீல் வைக்கப்படதோடு, விற்பனைக்காக அனுப்பப்பட்ட ஐஸ்கிரீம் பெட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமை உண்டதாக, 390 பேர் கண்டறியப்பட்டு, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐஸ்கிரீமில் இருந்து இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை எனவும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.