அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவிற்கு ட்ரம்ப் ஆதரவாளர்களால் இடையூறு ஏற்படுமா? - 50 மாநிலங்களிலும் உஷார் நிலை
Jan 17 2021 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபராக ஜோ பைடேன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், ஆயுதம் ஏந்திய போராட்டங்களுக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் 50 மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட டொனாலட் டிரம்ப்பை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். எனினும் பைடனின் வெற்றியை டிரம்ப் ஏற்க மறுத்துவந்தார். கடந்த ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து நடத்திய வன்முறை சம்பவம் சர்வதேச அளவில் கண்டனத்தை பெற்றது. இதை தொடர்ந்து அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என FBI எச்சரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் தேசிய காவல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.