அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவிற்கு ட்ரம்ப் ஆதரவாளர்களால் இடையூறு ஏற்படுமா? - 50 மாநிலங்களிலும் உஷார் நிலை

Jan 17 2021 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபராக ஜோ பைடேன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், ஆயுதம் ஏந்திய போராட்டங்களுக்கு வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் 50 மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட டொனாலட் டிரம்ப்பை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். எனினும் பைடனின் வெற்றியை டிரம்ப் ஏற்க மறுத்துவந்தார். கடந்த ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து நடத்திய வன்முறை சம்பவம் சர்வதேச அளவில் கண்டனத்தை பெற்றது. இதை தொடர்ந்து அமெரிக்காவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் வரும் 20ம் தேதி பதவியேற்கவுள்ளார். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபடக்‍கூடும் என FBI எச்சரித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் தேசிய காவல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00