செப்டம்பர் மாதத்துக்குள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்
Nov 28 2020 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செப்டம்பர் மாதத்துக்குள் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் வாய்ப்புக்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு 2021ம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி போடும் பெரும்பாலான பணிகளை முடிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தடுப்பு மருந்தை வினியோகம் செய்யும் பணிகளை அந்நாட்டு ராணுவம் மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.