ஆஸ்திரேலியாவில் கோடை காலம் தொடங்கியதால் கடற்கரையை நாடும் மக்கள் - சமூக இடைவெளியின்றி கூடுவதால் கொரோனா ஆபத்து
Nov 28 2020 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் கோடை காலம் தொடங்கிய நிலையில், மதியவேளைகளில் கடற்கரைகளை நாடிச்செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நடமாடியதைக் காணமுடிந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டைப் போல காட்டுத் தீ பரவும் அபாயம் இருப்பதால், பல இடங்களில் அதற்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.