ஆஸ்திரிய நாட்டில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்ய அரசு முடிவு - பரிசோதனைக்கான பணிகளில் முனைப்பு காட்டும் ராணுவம்
Nov 27 2020 8:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரிய நாட்டில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. சுமார் 9 கோடி பேர் வசிக்கும் ஆஸ்திரியாவில் 30 ஆயிரம் பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டுவருகிறது. இருப்பினும், யாரையும் கட்டாயப்படுத்தி பரிசோதனை நடத்தப்போவதில்லை என அரசு அறிவித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல் நாடாக அறியப்படுகிறது.