கொரோனா வைரஸைக் கட்டுப்பத்தும் தடுப்பு மருந்து : மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு பிரிட்டன் அரசு உத்தரவு
Nov 27 2020 7:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிட்டனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனீக்கா தடுப்பு மருந்தை சோதனை செய்யும் படி மருந்து மற்றும் மருத்துவ தயாரிப்புக்களின் கட்டுப்பாட்டு அமைப்புக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாத இறுதியில் இந்த தடுப்பு மருந்தை பிரிட்டனில் 40 லட்சம் பேருக்கு ஊசி மூலம் செலுத்த முடியும் என அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. இந்த மருந்தின் பயன்பாடு குறித்த இடைக்கால பரிசோதனை முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனீக்கா என்ற நிறுவனமும் இணைந்து கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்த மருந்தை உருவாக்கியுள்ளன.