வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறத் தயார் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Nov 27 2020 7:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் தேர்தலில், தேர்வுக் குழுவினர் ஜோ பைடனுக்கு வாக்களித்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறத் தயார் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இம்மாதம் 3ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஜனவரி மாதம் 20ம் தேதி அவர் அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், அவரது வெற்றிக்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாகவும், எளிதில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது தேர்வுக்குழுவினர் ஜோ பைடனுக்கு வாக்களித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறத் தயார் என ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.