மலைப்பாம்பிடம் சிக்கிய குஞ்சுகளை பத்திரமாக மீட்ட காப்பாற்றும் தாய் வாத்து - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Oct 24 2020 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலைப்பாம்பிடம் சிக்கிய வாத்து ஒன்று தனது குஞ்சுகளை காப்பாற்றிவிட்டு பாம்பிடம் மாட்டிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர், தனது ட்விட்டர் பதிவின் வீடியோவில், மலைப்பள்ளத்தில் வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இருக்கும்போது திடீரென பெரிய மலைப்பாம்பு ஒன்று வாத்து இருக்கும் பகுதிக்குள் நுழைகிறது. உடனே தாய் வாத்து 20 க்கும் மேற்பட்ட குஞ்சுகள் அனைத்தையும் வெளியேற்றி, பாம்பிடம் சிக்கிக்கொண்டு செய்வதறியாது சோகத்துடன் திகைக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.