லாகோஸ் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக வெளியான செய்திகளை நைஜீரிய ராணுவம் மறுப்பு
Oct 21 2020 4:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லாகோஸ் மாநிலத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை என நைஜீரிய ராணுவம் அறிவித்துள்ளது. நைஜீரியாவில் உருவாக்கப்பட்ட புதிய கொள்ளை தடுப்பு காவல் பிரிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்பிரிவை நீக்கி அரசு உத்தரவிட்டது. இருப்பினும் பொதுமக்களின் போராட்டங்கள் ஓயவில்லை. இதற்கிடையே, போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தியதாக ராணுவத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, லாகோஸ் மாநிலத்தில் 24 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.