ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் தாக்குதல் - உதவியளிக்க ஈராக் நாட்டுக்கு ஜெர்மனி அரசு உறுதி
Oct 20 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈராக் நாட்டிற்கு தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் புதிய திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் ஈராக் பிரதமர் அல் கதீமி ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி வந்த அவர், பிரதமர் ஏஞ்செலா மெர்க்கெல்லைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மெர்க்கெல், தீவிரவாத ஒழிப்பில் ஈராக் நாட்டுக்கு தொடர்ந்து உதவிகள் அளிக்கப்படும் என்றார்.