ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் படையெடுத்துவரும் வெட்டுக்கிளிகளால் இழப்பு - பெரும் கவலையில் மூழ்கியுள்ள விவசாயிகள்
Oct 20 2020 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேளாண் பயிர்கள் வெட்டுக்கிளிகளால் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய வெட்டுக்கிளிகள் வடமேற்கில் நகர்ந்து கிழக்கு ஆசிய நாடுகளையும் வெகுவாகப் பாதித்தன. இந்நிலையில், தற்போது மீண்டும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விளையும் பயிர்களைத் தின்று தீர்க்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். வெட்டுக்கிளிகளை அழிக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.