கொலம்பியாவில் பூர்வக்குடிமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் என புகார் - தாக்குதலைத் தடுக்கக்கோரி 5 ஆயிரம் பேர் போராட்டம்
Oct 20 2020 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் பூர்வக்குடிமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். பூர்வக்குடிமக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதாகவும், அம்மக்களின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும் பல ஆண்டுகளாக புகார்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், தலைநகர் பகோட்டாவில் இத்தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூர்வக்குடிமக்கள் பங்கேற்றனர்.