அர்ஜென்டினாவில் ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு என அறிவிப்பு
Oct 20 2020 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரே நாட்டில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவும் இணைந்தது. இதுவரை உலகில் ஐந்து நாடுகளில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. இப்பட்டியலில் 6வது நாடாக தென்னமெரிக்காவின் அர்ஜென்டினா தற்போது இணைந்துள்ளது. கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் தினமும் 13 ஆயிரம் பேருக்கும் மேல் புதிதாக கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.