இங்கிலாந்தில் எவ்வித அறிகுறியும் இன்றி பரவும் கொரோனா - ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு
Oct 19 2020 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் சுமார் 86 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
The University College London என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் எவ்வித அறிகுறியும் இன்றி பரவி வருவது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, 36 ஆயிரத்து 61 பேரிடம் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில், 115 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. மீதமுள்ள 86 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.