உள்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாத 100 நாட்களை கடந்த நியூசிலாந்து
Aug 9 2020 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாத 100 நாட்களை நியூசிலாந்து வெற்றிகரமாக கடந்துள்ளது.
பசிபிக் கடல் பிரதேச நாடான நியூசிலாந்தில் தற்போது வெறும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுவரை மொத்தம் ஆயிரத்து 569 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் 22 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதனால் உலகிலேயே கொரோனா வைரஸ் குறித்த பாதுகாப்பான நாடாக நியூசிலாந்து திகழ்கிறது. இந்நிலையில், உள்நாட்டில் நோய் தொற்று பரவாமல் இன்றுடன் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், வியட்னாம், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்த பின் மீண்டும் பாதிப்புக்கள் அதிகரித்தது போன்ற அபாயம் இருப்பதால், இன்னும் குறைந்தது இரண்டு மாதங்களுக்காவது மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் இருக்கவேண்டும் என பொதுமக்களை அரசு கேட்டுகொண்டுள்ளது.