அமெரிக்காவில் பணியாற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை அரசு துன்புறுத்துகிறது - சீன வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
Aug 4 2020 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் பணியாற்றி வரும் தங்கள் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களை அந்நாட்டு அரசு திட்டமிட்டு வேண்டுமென்றே கைது செய்து துன்புறுத்துகிறது என சீன வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜுவான் டாங் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள புற்றுநோய் கதிர்வீச்சியல் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் சோதனை நடத்திய அமெரிக்க புலனாய்வு பிரிவினர் ஜுவான் டாங் சீன ராணுவத்தை சேர்ந்தவர் எனக்கூறி அவரது உடமைகளை பறிமுதல் செய்தது. இதை சுட்டிக்காட்டியுள்ள சீன வெளியுறவுத்துறை தாங்கள் ஜுவான் டாங்கை அமெரிக்காவிலிருந்து தப்பிக்க வைக்க முயல்வதாக கூறுவது தவறு என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சீன ஆராய்ச்சியாளர்களை தொடர்ந்து கண்காணிப்பது, துன்புறுத்துவது, வேண்டுமென்றே கைது செய்வது போன்ற செயல்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் சீன வெளியுறவுத்துறை கூறியுள்ளது.