ஜப்பானில் ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 64 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு
Jul 10 2020 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் பெய்த பலத்த மழை காரணமாக 64 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் தென்பகுதியில் யுஷு தீவு மற்றும் பல இடங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. யுஷு தீவில் ஒரு காப்பகத்தில் தண்ணீர் புகுந்து இருபது பேர் உயிரிழந்ததாக முதலில் செய்தி வெளியானது. அதன் பின்னர் தொடர்ந்த மழையால் குமமோட்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலங்கள் மற்றும் சாலைகள் உடைந்தன. வெள்ளத்தில் சிக்கி மேலும் இருபது பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 64 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, மழையால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்யும் பணிகளில் அரசுப் பணியாளர்களும், பொதுமக்களும் ஈடுபட்டுவருகின்றனர்.