பொலிவியா அதிபர் ஜீனைனுக்கு கொரோனா தொற்று உறுதி - வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை
Jul 10 2020 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொலிவியா அதிபர் ஜீனைன் ஏயெஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால அதிபராக உள்ள ஜீனைன் ஏயெஸ், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உரையாற்றினார். அப்போது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், டாக்டர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக அந்நாட்டு சுகாதரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு அமைச்சர் என இரு அமைச்சர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
பொலிவியா நாட்டில் இதுவரை 42 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகள் அங்கு நடந்து வந்தாலும், பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.