சீனாவில் ஏரியில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 21 பேர் உயிரிழப்பு 16 பேர் படுகாயம்
Jul 9 2020 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் குய்ஷோ மாகாணத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சீனாவில் குய்ஷே மாகாணத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து ஆன்ஷூன் நகரில் உள்ள ஒரு பாலத்தில் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனை அடுத்து சாலையின் குறுக்கே வேகமாக சென்ற பேருந்து அங்குள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் பேருந்தை நீரில் இருந்து வெளியில் எடுத்தனர். இந்த விபத்தில் 21 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் பேருந்து கார் ஒன்றை முந்த முயலும்போது நிலை தடுமாறி சாலையின் குறுக்கே ஓடி, பாதுகாப்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு நீரில் விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன.