கொலம்பியாவில் எரிவாயு லாரி வெடித்துச் சிதறி விபத்து : மேலும் 6 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்
Jul 8 2020 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறிய விபத்தில் மேலும் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொலம்பியாவின் பாரன்குயில்லா நகருக்கு அருகே கேசோலின் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்தது. அப்போது, எரிபொருள் நிரம்பிய கன்டெய்னர் வெடித்துத் தீ பற்றியதில், அறுபதுக்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கினர். இதில் பலத்த காயமடைந்த 7 பேர் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 6 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல், காயமடைந்த ஐம்பது பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் இவான் டக் ஆறுதல் தெரிவித்துள்ளார்.