கொலம்பியாவில் எரிவாயு லாரி வெடித்துச் சிதறி விபத்து : மேலும் 6 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

Jul 8 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலம்பியாவில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி வெடித்துச் சிதறிய விபத்தில் மேலும் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலம்பியாவின் பாரன்குயில்லா நகருக்கு அருகே கேசோலின் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்தது. அப்போது, எரிபொருள் நிரம்பிய கன்டெய்னர் வெடித்துத் தீ பற்றியதில், அறுபதுக்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கினர். இதில் பலத்த காயமடைந்த 7 பேர் உயிரிழந்ததாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 6 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே போல், காயமடைந்த ஐம்பது பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில், இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிபர் இவான் டக் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00