சீனாவில் ஒருவாரமாக பெரும்பாலான பகுதிகளில் நீடிக்கும் கனமழை - மழைநீரால் சூழப்பட்ட பகுதிகளில் தவிக்கும் பொதுமக்கள்
Jul 8 2020 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக தண்ணீரால் சூழப்பட்ட கிராமத்திலிருந்து 2 ஆயிரம் பேர் பத்திரமாக படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
இம்மாதம் இரண்டாம் தேதி சீனாவின் பல பகுதிகளில் பெய்யத் தொடங்கிய கனமழை தொடர்ந்து நீடித்துவருகிறது. ஹுனான் மாகாணத்தின் பல ஆறுகளில் 3.5 மீட்டர் அளவுக்கு தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. ஹூபே மாகாணத்தின் ஜிங்சவ் நகரில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் கார்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் பாதியளவு தண்ணீரில் மூழ்கின. இதே போல் அன்ஹுய் மாகாணத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மில்லியன் க்யூபிக் மீட்டர் தண்ணீரை வெளியேற்ற அனைத்து பகுதிகளிலும் ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு, 24 மணிநேரமும் இயங்கிவருகின்றன. கிழக்கு சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது.