சீனாவில் கொரோனா வைரசை தொடர்ந்து, பரவத்தொடங்கியுள்ள பிளேக் நோய் - பொது மக்கள் கலக்கம்
Jul 6 2020 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கொரோனா வைரசை தொடர்ந்து, புபோனிக் பிளேக் நோய் பரவத்தொடங்கியுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வரும் நிலையில், பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரசும் அண்மையில் கண்டறியப்பட்டது. சீனாவின் தன்னாட்சி மாகாணமான மங்கோலியாவில், பயன்னார் நகரில் ஒருவருக்கு புபோனிக் பிளேக் நோய் கண்டறியப்பட்டுள்ளது. பிளேக் நோய், பரவும் தன்மையுடைய பாக்டீரியா தொற்று என்பதால், பொதுமக்கள் அனைவரும் சுய பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயன்னார் மக்களுக்கு மூன்றாம் நிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புபோனிக் பிளேக்கானது, எலி போன்ற கொறிக்கும் வகை உயிரினங்களில், வாழும் உண்ணிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவும், அதனால் எலி, அணில் போன்ற பிராணிகளை உட்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.