மெக்சிகோவில் கொரோனா வைரசால் 30 ஆயிரம் பேர் உயிரிழப்பு : நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி
Jul 5 2020 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மெக்சிகோவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியது.
நேற்று ஒரே நாளில் 526 உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முப்பதாயிரத்து 366 ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் 2 லட்சத்து 52 ஆயிரத்து 165 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நேற்று மட்டும் புதிதாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோரின் உண்மையான எண்ணிக்கை தைவிட அதிகமாக இருக்கும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிலேனியோ என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், ஜுலை 19ம் தேதி வரை உயிரிழந்தவர்கள் தொடர்பாக அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.