சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு அடுத்தவாரம் பயணம் - கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு
Jul 4 2020 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனாவுக்கு செல்ல உள்ளது.
சீனாவின் வூகானில் உள்ள இறைச்சி சந்தையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவியது. ஆனால் இதை, சீனா ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கிடையே, வூகானில் உள்ள வைராலஜி நிறுவனத்தில், செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து கசிந்து விட்டதாக அமெரிக்க டி.வி., பரபரப்பு செய்தி வெளியிட்டது. இதை, அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கூறி வந்தார்.
இந்நிலையில், கொரோனா வைரசின் தோற்றம் பற்றி விசாரணை நடத்த, உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழுவை அடுத்த வாரம் சீனாவுக்கு செல்கிறது. இந்தக் குழு, கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் முதன் முதலில் பரவியது, விலங்குகள் மூலமாக மனிதர்களிடம் தொற்று வந்ததா? அல்லது வெளவ்வால்களிடம் இருந்து மனிதர்களிடம் பரவியதா? என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த உள்ளது.