ரஷ்ய அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க சட்டத்திருத்தம் - மக்கள் ஆதரவுடன் அமலுக்கு வந்தது

Jul 4 2020 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தன.

ரஷ்ய அதிபராக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. இந்நிலையில், தற்போதைய அதிபர் புதின், வரும் 2036ம் ஆண்டு வரை அந்நாட்டு அதிபராகத் தொடரும் விதத்தில் சில மாற்றங்களை அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நாடு முழுவதும் நடைபெற்ற வாக்கெடுப்பில் 78 சதவிகிதம் பேர் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகவும், 22 சதவிகிதம் பேர் எதிராகவும் வாக்களித்தனர். ரஷ்ய மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக புதின் இருப்பதாலேயே இந்த அளவுக்கு ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களின் ஆதரவுடன், இந்த சீர் திருத்தங்கள் அமலுக்கு வந்தன. இரண்டாவது முறையாக அதிபர் பதவி வகிக்கும் புதினின் ஆட்சி வரும் 2024ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், எதிர்க்கட்சியினர் சிலர் இந்த மாற்றங்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00