அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் - போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
Jun 4 2020 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரகால போராட்டத்துக்குப் பின், அமெரிக்காவில், நான்கு காவல் அதிகாரிகள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மினசோட்டா மாநிலத்தின் மினியாபொலிஸ் நகரில் கடந்த 25ம் தேதி, போலீஸ் பிடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அமெரிக்கா முழுவதும் பரவிய போராட்டங்கள், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவின. இந்நிலையில், கருப்பினத்தவரின் கழுத்தில் முழங்காலை வைத்து 8 நிமிடத்துக்கும் மேலாக அழுத்திப்பிடித்த தெரெக் சாவின் உள்ளிட்ட நான்கு காவல் அதிகாரிகள் மீது கடும் சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெரெக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டும், மற்ற மூவர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்தது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் ஏற்கெனவே பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.