வட கொரியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டன - உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்
Jun 4 2020 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கொரோனா வைரசின் பிடியில் இருந்து உலகம் எப்போது விடுபடும் என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் நீடிக்கிறது. இதன்காரணமாக, வட கொரியாவில், வழக்கமாக ஏப்ரல் 1 ஆம் தேதி துவக்கப்படும் கல்வியாண்டு, கொரோனா அச்சத்தால் 2 மாதங்கள் தாமதமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முகக்கவசம் அணிந்து ஆரம்ப பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. அனைவரும் ஆடையில் சிவப்பு நிற பூக்கள் மற்றும் முகக்கவசம் அணிந்திருந்தனர். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தி வகுப்புகளுக்குள் அழைத்துச்சென்றனர்.