கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்காவில் விஸ்வரூபமெடுக்கும் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் - வெள்ளை மாளிகையை அதிர வைத்த போராட்டக்காரர்கள்
Jun 2 2020 10:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சுற்றி வளைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்காவில், கருப்பின மக்கள் தொடர்ந்து அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அரசு மற்றும் காவல் துறை ஆகியவற்றால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கருப்பின இளைஞர் அமெரிக்காவில் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மரணம் அடைந்தார். இவரைக் கைது செய்த போது காருக்கு வெளியே தள்ளி விட்டு காவல் துறையினர் கழுத்தில் காலால் அழுத்தியதில் இறந்து விட்டதாக வீடியோவுடன் தகவல் வெளியானது. இதையொட்டி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதில் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் கடும் கலவரம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கண்ணீர்ப் புகை, மிளகு ஸ்பிரே போன்றவை மூலம் தேசியப் பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.