அமெரிக்காவில் நாடு முழுவதும் அதிகரிக்கும் போராட்டங்கள் : வன்முறையில் ஈடுபட்டால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு
May 30 2020 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த கருப்பினத்தவரின் குடும்பத்தினருடன் பேசியதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருடன் பேசியதாக தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் எந்தப் பகுதியிலும் வன்முறைக்கு இடமளிக்க முடியாது என எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஃப்ளாய்ட் மரணத்தைத் தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில் பல இடங்களில் கடைகளின் கண்ணாடிகளை உடைத்தல், தீ வைத்தல் என வன்முறை சம்பவங்களும் தொடர்கின்றன. இது குறித்து ட்விட்டரில் ஏற்கெனவே பதிவிட்டட அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என எச்சரித்திருந்தார்.