ஹண்டூராஸ் நாட்டின் பெண்கள் சிறையில் கைதிகளுக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு; காயமடைந்த இருவருக்கு சிகிச்சை
May 25 2020 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹண்டூராஸ் நாட்டின் பெண்கள் சிறையில் நடந்த கலவரத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர், காயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஹண்டூராஸ் தலைநகர் டெகுசிகால்பா நகருக்கு அருகில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் ஒரு நாள் முழுவதும் கைதிகளுக்கு இடையே மோதல் நடந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக, சில பெண் கைதிகள் சிறைக்குள் தீ வைத்தனர். இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துவருகின்றனர். நிலைமை கட்டுக்குள் வநதுளளதாகவும், கலவரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.