வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்
May 24 2020 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு தேவையான உதவிகள் அளிக்கும் என சீன அதிபர் ஸி- ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடரில், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொண்டு, ஆலோசனை நடத்தினார். பொருளாதாரத் துறை உறுப்பினர்களிடையே பேசிய ஷி ஜின்பிங், இவ்வாண்டு வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்க முடியும் என்றும், ஏனென்றால், நாம் முன்வைத்த இந்த இலக்கு முடியாதது அல்ல என குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு உதவி அளிப்பது என்பது நம் தலைமுறையினரின் குறிக்கோள் என்று கூறிய அதிபர் ஸி- ஜின்பிங், அனைவருக்கும் வசதியாக வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.