கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை மனித உடலில் செலுத்தியதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வாய்ப்புகள் தென்படுகின்றன - அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனங்கள் தகவல்
Apr 9 2020 6:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தடுப்பூசியை மருத்துவ பரிசோனைக்குட்படுத்தும் பணிகளில் அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ள நிலையில், அதனை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மனிதர்கள் மீது பரிசோதித்ததில், அவர்களது நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.