நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 8 சதவீதமாக குறையும் - ஐ.நா. கணிப்பு
Apr 9 2020 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தாக்கத்தால், 2020-21-ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4 புள்ளி 8 சதவீதமாக குறையும் என ஐ.நா கணித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என ஐ.நா கணித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான ஐ.நாவின் ESCAP ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளவில் வர்த்தகம், சுற்றுலாத்துறை உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வீழ்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என இந்திய அரசு மதிப்பிட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, 4 புள்ளி 8 சதவீதமாக வீழ்ச்சியடையும் என ESCAP ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.